ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இனியும் தமிழன் ஏமாறமாட்டான்

நிச்சயம் என்றேற்றால் சத்யன் உதிப்பான்
அபயம் என்றால் அமுதன் ஆதரிப்பான்
சமயம் பார்த்தால்சாய்ந்திட மாட்டான்
இதயம் மாய்ந்தால் சோர்ந்திட மாட்டான்

கப்பலெற்றி தரம் பிரிக்க சரக்காக இருக்கார்
துப்பு துலக்கி திறம்சோதிக்க நறுக்காகார்
தப்பல்ல விலக்க நனி கூற்றுக்களாகார்
குப்பையல்ல கழிக்க இனி பேச்சுக்கள் ஆற்றார்

தரணி பேச தமிழ் மணம் பரப்புவார்
சீரணி நெகிழ தமிழர் மனம் திறப்பார்
அணிதேசம் தமிழ்த் திணம் கூட்டுவார்
நாணி நிற்காமல் தமிழர் குணம் செப்புவார்

சபை கேட்க கவித்தமிழ் இசைப்பார்
இசை பாட புவி களி கொள்வார்
அவை நாடி கேள்வி கணை தொடுப்பார்
சுவை கூட்டி தமிழை தினம் வளர்ப்பார்

கண்ணாக தமிழை கட்டிக்காப்பார்
பண்ணாக அழகை மீட்டி இரசிப்பார்
பஞ்சாக உயிர்தமிழை ஆகாயத்தில் தூசாக்கார்
நெஞ்சார மெய்த்தமிழை நேயமுடன் நேசிப்பார்

ஏட்டுச்சுரக்காய் அல்ல தமிழர் எழுதி அழிந்திடார்
கட்டு மரக்கலமல்ல தமிழ் திசை மாறி சென்றிடார்
சிட்டுச்சிறகல்ல நொடித்தொடித்து வீழார்
பட்டுத்துகில் அல்ல உடுத்து கழைந்து விடார்

தவழ்ந்து தத்தி தமிழ் நடை பயில்வார்
மகிழ்ந்து ஏற்றி எழில் உடை அணிவார்
நுழைந்து காட்டி உலக ஏட்டில் இடம் பிடிப்பார்
கவிழ்ந்து வீழ்த்தினும் இமயமேட்டில் தடம் பதிப்பார்

உதிரம் கலந்து உயிர்த்த தமிழ் ஒழியார்
உதரம் எரிய துளைத்தால் தமிழர் கொதிப்பார்
கதையும் சாற்றி மறுத்தால் ஈவு பாரார்
எதையும் கூறி கிறங்க நாவில் சேரார்

மொழி தேன் மலரல்ல முகர்ந்திட மறந்திட மாட்டான்
தமிழ் தொனி பனியல்ல உணர்ந்திட மரத்திட மாட்டான்
தமிழ் பசுமை இலையல்ல உதிர்ந்திட உலர்ந்திட மாட்டான்
செம்மொழி இணையில்லா தமிழன் இனியும் ஏமாறமாட்டான்


- அருந்தா