உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலர்ந்தது
அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை
பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்
அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன
தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை
வெள்ளி, 9 ஜூலை, 2010
நானும் நம் காதலும்..!
எனை நீ- பிரிந்து
காலங்கள் பல கடந்தும்
உன்னைத் தேடியே
நான் இன்றும்
பயணித்துக்
கொண்டிருக்கிறேன்
என் உயிரில் சிதறிய
உன் நினைவுத்துளிகளில்
நான் நிதமும்
நனைத்து கொண்டிருக்கிறேன்!
இன்னமும் எனக்கு
பழக்கப்படவில்லை
உன் நினைவின்றி
வாழ்வதற்கு!
என் உயிரில்
வாழ்ந்து விட்டு
என் நிழலைக் கூட
நிராகரித்துச்
சென்றுவிட்டாய்!
வண்ணத்தை
தொலைத்த
வண்ணத்துப் பூச்சியாய்
உயிர் இருந்தும்
பொம்மையாய்
நானும் நம் காதலும்
தவித்து நிற்கிறோம்
தனித்து நிற்கிறோம்
என் நினைவுகளை
நீ-இன்று
உதறிவிட்டாலும்
என் உயிரிருக்கும் வரை
உன் நினைவில்
மட்டுமே
உயிர் வாழ்வேன்!
ஒருவேளை
நான் இறந்தாலும்
உன் நினைவோடுதான்
உயிரையும் விடுவேன்!!
வியாழன், 8 ஜூலை, 2010
தமிழனுக்கு வேதனைக் கூடம் சைனாவுக்கோ சோதனைக்கூடம்..
விடிந்தால் மடிவோமா?
இல்லை
மடிந்தால் விடியுமா? யென
மரண அச்சத்தின் மிச்சமாய் நின்ற
மக்கள் வெள்ளம்...
காட்டிக்கொடுத்த தமிழனின் வினையால்
காட்டிய இடத்திற்கு வந்தான் தமிழன்
கூடிய இடத்தில் வீழ்வான் தமிழன் யென
ராஜ பட்சிகள் மாமிசம் திண்ண
வட்டமடித்த சூட்சம இடம்....
கோடி செலவுகள் செய்து தயாரித்த
உயிர்கொல்லி ஆயுதம் உதவுமாயென்று
வல்லரசு நாடுகள் அள்ளிக் கொடுக்க...
பதிலுக்கு கருகிய எம் மக்களை வாரி கொடுத்த
தமிழனுக்கு வேதனைக் கூடம்
சைனாவுக்கோ சோதனைக்கூடம்...
தடை செய்யப்பட்ட ஆயுததிற்கு
அங்கு தடைகள் இல்லை
தமிழனை அழிப்பதே அவர்களின்
தலையாய கொள்கை....
போர் மரபு கூறிய முதியோர், சிறியோர்?
போர் மரபு மீறிய குற்றுயிர் மரணம்
கண்டும் காணாத ஐநா சாசனம்
கட்டிக் காத்து
காட்டி கொடுத்தது இந்திய சீதனம்
ஆயிரக்கணக்கில்
மக்களைக் கொன்று
அழித்தொழித்த
முள்ளிவாய்க்காலில்
பெறுக்கெடுத்த மனிதரெத்தம்
உலகத் தமிழர் நெஞ்சில் பாய்ந்து
வளர்த்தெடுக்குது தமிழிழத்தை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)