வெள்ளி, 9 ஜூலை, 2010

நானும் நம் காதலும்..!


எனை நீ- பிரிந்து
காலங்கள் பல கடந்தும்
உன்னைத் தேடியே
நான் இன்றும்
பயணித்துக்
கொண்டிருக்கிறேன்

என் உயிரில் சிதறிய
உன் நினைவுத்துளிகளில்
நான் நிதமும்
நனைத்து கொண்டிருக்கிறேன்!

இன்னமும் எனக்கு
பழக்கப்படவில்லை
உன் நினைவின்றி
வாழ்வதற்கு!

என் உயிரில்
வாழ்ந்து விட்டு
என் நிழலைக் கூட
நிராகரித்துச்
சென்றுவிட்டாய்!

வண்ணத்தை
தொலைத்த
வண்ணத்துப் பூச்சியாய்

உயிர் இருந்தும்
பொம்மையாய்
நானும் நம் காதலும்
தவித்து நிற்கிறோம்
தனித்து நிற்கிறோம்

என் நினைவுகளை
நீ-இன்று
உதறிவிட்டாலும்

என் உயிரிருக்கும் வரை
உன் நினைவில்
மட்டுமே
உயிர் வாழ்வேன்!

ஒருவேளை
நான் இறந்தாலும்
உன் நினைவோடுதான்
உயிரையும் விடுவேன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக