ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

காதல் மொழிகிறது


குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்து போனது மழை!
காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்க சாம்பலானது
நாகரீக முகமூடி!

***************************

தோட்டத்து பூக்கள்
மழையில் குளித்தன!
காய்ச்சல் வந்ததெனக்கு
என் பார்வையில்
அவையெல்லாம் நீயானதால்!

***************************

பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்
மனதில் வந்து போகிறதுன் முகம்!
சபிக்கிறேன் நான் மின்னலை
சற்று நீடித்தாலென்னவென்று?

***************************

உன் இதழ்களை கவனித்தவாறே
உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!
உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது
எனக்கான காதல் உதிராதாவென்று?

***************************

நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில்
நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம்
சொல்லாமல் சொல்லிப் போனது
நம் கண(ன)ம் பொருந்திய காதலை!

***************************

ஆழியில் வசிக்கும் சிப்பியானது
வானிலிருந்து மழைத்துளியொன்றை
உள்வாங்கி முத்தாக்குமாம்!
நீ தந்த முத்தமும் அதுபோலவே
வெட்கத்தை தின்று நம்முள்
காதலை கருவாக்கியது!

கயல்விழி சண்முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக