ஞாயிறு, 22 மே, 2011

எங்கே எந்தன் தேவதை

எங்கே எந்தன் தேவதை

த.தர்ஷன்
thanks Lanka sri

எங்கே எந்தன் தேவதை
எங்கே எந்தன் தேவதை
கண்ணில் வந்த நாள் முதல்
கண்ணீர் தந்து பார்க்கிறாள்
எங்கே எந்தன் தேவதை

கண்ணால் பேசினாய் மனசை தீண்டினாய்
காதல் தானடி காதல் தானடி
காதல் வந்ததால் கவியன் ஆகினேன்
கவிதை தானடி கவிதை தானடி

எனக்கென இருந்தது ஒரு நிழலு -அது
உனைக்கண்டு தொடர்ந்தது தெரியாதா?
உனக்கென இருந்தது ஒரு பெயரு -அது
என்னுயிரில் புதைந்தது புரியாதா?

நீ பிரிந்தாலும் மண்ணில் இணைந்தாலும்
எந்தன் உசிரு உன்னை சேருமடி
வானில் தோன்றினாய் வாழ்வை திருடினாய்
இதயம் தானடி இதயம் தானடி

கனவில் பேசியே காலம் கழிக்கிறேன்
நினைவில் தானடி நினைவில் தானடி
உயிரில் உன்முகம் தீட்டுகிறேன்
உதிரமும் அழைப்பது கேட்கிறதா?

ஊர் உன்னை சேர்வதை எதிர்த்தாலும்
உன்னை விட வேறிங்கு இல்லையடி
நீ பறந்தாலும் என்னை மறந்தாலும்
நீ தான் எந்தன் ஒரு நினைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக