ஞாயிறு, 22 மே, 2011

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

வேல்தர்மா
thanks Lankasri

ஊமைகள்
மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்

தாபம்
உணர்வுப் பட்டறையின்
வெப்பம் வெளியே வந்தது
கன்னியவள் மூச்சு

மறுவாழ்வு
வெள்ளாடை விதைவை
பட்டுச் சேலை உடுத்தினாள்
வானவில்

வாழ்க்கை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ


அதிட்டக் கட்டை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ

கொள்கை(ளை)
மகன் சாகட்டும்
மருமகள் தாலி அறட்டும்
இந்திய வெளியுறவுக் கொள்கை

எழும்பியது
பொறுமை இடறி விழுந்தது
இடறு பட்ட மிருகம்
கோபம்

சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்

பெயரென்ன?
பாதுகாப்பு வலயத்தில்
பலியானோர் எண்பதாயிரம்
நாமம் கரணம்

செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக