ஹைக்கூ கவிதைகள்
ஹைக்கூ கவிதைகள்
ஊமைகள்
மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்
தாபம்
உணர்வுப் பட்டறையின்
வெப்பம் வெளியே வந்தது
கன்னியவள் மூச்சு
மறுவாழ்வு
வெள்ளாடை விதைவை
பட்டுச் சேலை உடுத்தினாள்
வானவில்
வாழ்க்கை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ
அதிட்டக் கட்டை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ
கொள்கை(ளை)
மகன் சாகட்டும்
மருமகள் தாலி அறட்டும்
இந்திய வெளியுறவுக் கொள்கை
எழும்பியது
பொறுமை இடறி விழுந்தது
இடறு பட்ட மிருகம்
கோபம்
சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்
பெயரென்ன?
பாதுகாப்பு வலயத்தில்
பலியானோர் எண்பதாயிரம்
நாமம் கரணம்
செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக