ஞாயிறு, 30 அக்டோபர், 2011
யாரறிவார் இவள் மனதை?
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....
வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..
எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....
எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?
காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...
மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..
மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....
பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை..
செவ்வாய், 25 அக்டோபர், 2011
வாங்க ஒரு கவிதைக்குப் போகலாம்!
![]() |
| ரவீந்திரநாத் தாகூர் |
![]() |
| இந்தப் படத்துக்கும் கவிதைக்கும் யாதொரு சம்மந்தமும் கெடையாது! ஹி ஹி ஹி ! |
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
நட்பு ஒரு சுமையல்ல
அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
ஞாயிறு, 22 மே, 2011
ஹைக்கூ கவிதைகள்
ஹைக்கூ கவிதைகள்
![]() |
ஊமைகள்
மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்
தாபம்
உணர்வுப் பட்டறையின்
வெப்பம் வெளியே வந்தது
கன்னியவள் மூச்சு
மறுவாழ்வு
வெள்ளாடை விதைவை
பட்டுச் சேலை உடுத்தினாள்
வானவில்
வாழ்க்கை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ
அதிட்டக் கட்டை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ
கொள்கை(ளை)
மகன் சாகட்டும்
மருமகள் தாலி அறட்டும்
இந்திய வெளியுறவுக் கொள்கை
எழும்பியது
பொறுமை இடறி விழுந்தது
இடறு பட்ட மிருகம்
கோபம்
சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்
பெயரென்ன?
பாதுகாப்பு வலயத்தில்
பலியானோர் எண்பதாயிரம்
நாமம் கரணம்
செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்
எங்கே எந்தன் தேவதை
எங்கே எந்தன் தேவதை
![]() |
எங்கே எந்தன் தேவதை
எங்கே எந்தன் தேவதை
கண்ணில் வந்த நாள் முதல்
கண்ணீர் தந்து பார்க்கிறாள்
எங்கே எந்தன் தேவதை
கண்ணால் பேசினாய் மனசை தீண்டினாய்
காதல் தானடி காதல் தானடி
காதல் வந்ததால் கவியன் ஆகினேன்
கவிதை தானடி கவிதை தானடி
எனக்கென இருந்தது ஒரு நிழலு -அது
உனைக்கண்டு தொடர்ந்தது தெரியாதா?
உனக்கென இருந்தது ஒரு பெயரு -அது
என்னுயிரில் புதைந்தது புரியாதா?
நீ பிரிந்தாலும் மண்ணில் இணைந்தாலும்
எந்தன் உசிரு உன்னை சேருமடி
வானில் தோன்றினாய் வாழ்வை திருடினாய்
இதயம் தானடி இதயம் தானடி
கனவில் பேசியே காலம் கழிக்கிறேன்
நினைவில் தானடி நினைவில் தானடி
உயிரில் உன்முகம் தீட்டுகிறேன்
உதிரமும் அழைப்பது கேட்கிறதா?
ஊர் உன்னை சேர்வதை எதிர்த்தாலும்
உன்னை விட வேறிங்கு இல்லையடி
நீ பறந்தாலும் என்னை மறந்தாலும்
நீ தான் எந்தன் ஒரு நினைவு
தேசக் காதல்
யூலியட் இறக்கவில்லை
நடித்திருந்தாள்.
ரோமியோ அறியவில்லை
இறந்துவிட்டான்.
யூலியட் அறிந்துபின்
இறந்துவிட்டாள்.
“இருவரும் இறக்கவில்லை
விதைக்கப்பட்டார்கள்”
எழுதிவைத்தான் சோக்கிரட்டீஸ்
காதலுக்காய் உயிரைவிடுதல்
காவியம் என்று.
ரோமியோ! யூலியட்!
உருகி வழிகிறது
உலகம் முழுதும்
ஒன்றுக்கு பதிலாய்
பல நூறாயிரமாய்
நாமும் காதலித்தோம்.
இதயச்சுவர்களில்
ஈரமாய் எழுதினோம்.
ஊர்காற்று முழுதும்
ஓலை அனுப்பினோம்.
காது மடல்களில்
கானம் இசைத்தோம்.
மூக்கு முட்டிச்
சுவாசித்தோம்.
இதழ்களால்
இறுகப் பற்றினோம்.
கண்கள் முழுதும்
நிறைத்தோம்.
ஒரு கோப்பையில்
உண்டோம்.
காலடிச் சுவடுகளில்
கால்வைத்து நடந்தோம்.
அவள் ஒளியில்
அவள் தந்த சுகத்தில்
அவள் காட்டிய அரவணைப்பில்
ஆனந்தாமாய் இருந்தோம்.
காதல்..! காதல்…!
இனிதாய்தான் பருகினோம்.
ஆனால்
எங்களை
நிஐமாய் நேசித்தவளை
சாகடிக்கும் போது
நாமும் இறந்துவிட்டோம்.
எங்களுடைய
சாவுக்கு யாரும்
வருத்தப்படவில்லை.
எங்கள் காதலை
காவியமாய்
யாரும் இன்றுவரை எழுதவில்லை.
நாம் இத்தாலியில் பிறக்கவில்லை
எங்கள் வீதிகளில்
வெரோனாவின் வாசம் இல்லை
என்பதாலோ தெரியவில்லை.
வல்லவர்களே!
நீங்கள் ஒட்டிய
பயங்கரவாத முத்திரைகளுடன்
உங்கள் வாசல்களில்
வந்து நிற்கும்
எங்கள் உறவுகள் சொல்லுவார்கள்.
எங்கள் காதலை
ஒருநாள்
உங்களுக்கு
மனச்சாட்சி வந்தால்
அவர்கள் சொல்வதையும்
கேளுங்கள்.
எங்களையும் எழுதுங்கள்.
பெரும் காவியமாய்
அல்லாவிட்டாலும்
நாங்களும் காதலுக்காக
உயிரை விட்ட
மானசீக காதலர்களே!
என்ற
பேர் உண்மையை
உலகம் அறியப்போதுமான
“நாம் பயங்கரவாதிகள் அல்ல”
என்ற
சிறு குறிப்பை மட்டும்...!
திங்கள், 25 அக்டோபர், 2010
யாரறிவார் இவள் மனதை?
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....
வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..
எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....
எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?
காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...
மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..
மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....
பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை...



