நிச்சயம் என்றேற்றால் சத்யன் உதிப்பான்
அபயம் என்றால் அமுதன் ஆதரிப்பான்
சமயம் பார்த்தால்சாய்ந்திட மாட்டான்
இதயம் மாய்ந்தால் சோர்ந்திட மாட்டான்
கப்பலெற்றி தரம் பிரிக்க சரக்காக இருக்கார்
துப்பு துலக்கி திறம்சோதிக்க நறுக்காகார்
தப்பல்ல விலக்க நனி கூற்றுக்களாகார்
குப்பையல்ல கழிக்க இனி பேச்சுக்கள் ஆற்றார்
தரணி பேச தமிழ் மணம் பரப்புவார்
சீரணி நெகிழ தமிழர் மனம் திறப்பார்
அணிதேசம் தமிழ்த் திணம் கூட்டுவார்
நாணி நிற்காமல் தமிழர் குணம் செப்புவார்
சபை கேட்க கவித்தமிழ் இசைப்பார்
இசை பாட புவி களி கொள்வார்
அவை நாடி கேள்வி கணை தொடுப்பார்
சுவை கூட்டி தமிழை தினம் வளர்ப்பார்
கண்ணாக தமிழை கட்டிக்காப்பார்
பண்ணாக அழகை மீட்டி இரசிப்பார்
பஞ்சாக உயிர்தமிழை ஆகாயத்தில் தூசாக்கார்
நெஞ்சார மெய்த்தமிழை நேயமுடன் நேசிப்பார்
ஏட்டுச்சுரக்காய் அல்ல தமிழர் எழுதி அழிந்திடார்
கட்டு மரக்கலமல்ல தமிழ் திசை மாறி சென்றிடார்
சிட்டுச்சிறகல்ல நொடித்தொடித்து வீழார்
பட்டுத்துகில் அல்ல உடுத்து கழைந்து விடார்
தவழ்ந்து தத்தி தமிழ் நடை பயில்வார்
மகிழ்ந்து ஏற்றி எழில் உடை அணிவார்
நுழைந்து காட்டி உலக ஏட்டில் இடம் பிடிப்பார்
கவிழ்ந்து வீழ்த்தினும் இமயமேட்டில் தடம் பதிப்பார்
உதிரம் கலந்து உயிர்த்த தமிழ் ஒழியார்
உதரம் எரிய துளைத்தால் தமிழர் கொதிப்பார்
கதையும் சாற்றி மறுத்தால் ஈவு பாரார்
எதையும் கூறி கிறங்க நாவில் சேரார்
மொழி தேன் மலரல்ல முகர்ந்திட மறந்திட மாட்டான்
தமிழ் தொனி பனியல்ல உணர்ந்திட மரத்திட மாட்டான்
தமிழ் பசுமை இலையல்ல உதிர்ந்திட உலர்ந்திட மாட்டான்
செம்மொழி இணையில்லா தமிழன் இனியும் ஏமாறமாட்டான்
- அருந்தா
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
வெள்ளி, 9 ஜூலை, 2010
தெரியாத என் காதல் பயணம்
உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலர்ந்தது
அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை
பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்
அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன
தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலர்ந்தது
அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை
பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்
அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன
தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை
நானும் நம் காதலும்..!

எனை நீ- பிரிந்து
காலங்கள் பல கடந்தும்
உன்னைத் தேடியே
நான் இன்றும்
பயணித்துக்
கொண்டிருக்கிறேன்
என் உயிரில் சிதறிய
உன் நினைவுத்துளிகளில்
நான் நிதமும்
நனைத்து கொண்டிருக்கிறேன்!
இன்னமும் எனக்கு
பழக்கப்படவில்லை
உன் நினைவின்றி
வாழ்வதற்கு!
என் உயிரில்
வாழ்ந்து விட்டு
என் நிழலைக் கூட
நிராகரித்துச்
சென்றுவிட்டாய்!
வண்ணத்தை
தொலைத்த
வண்ணத்துப் பூச்சியாய்
உயிர் இருந்தும்
பொம்மையாய்
நானும் நம் காதலும்
தவித்து நிற்கிறோம்
தனித்து நிற்கிறோம்
என் நினைவுகளை
நீ-இன்று
உதறிவிட்டாலும்
என் உயிரிருக்கும் வரை
உன் நினைவில்
மட்டுமே
உயிர் வாழ்வேன்!
ஒருவேளை
நான் இறந்தாலும்
உன் நினைவோடுதான்
உயிரையும் விடுவேன்!!
வியாழன், 8 ஜூலை, 2010
தமிழனுக்கு வேதனைக் கூடம் சைனாவுக்கோ சோதனைக்கூடம்..

விடிந்தால் மடிவோமா?
இல்லை
மடிந்தால் விடியுமா? யென
மரண அச்சத்தின் மிச்சமாய் நின்ற
மக்கள் வெள்ளம்...
காட்டிக்கொடுத்த தமிழனின் வினையால்
காட்டிய இடத்திற்கு வந்தான் தமிழன்
கூடிய இடத்தில் வீழ்வான் தமிழன் யென
ராஜ பட்சிகள் மாமிசம் திண்ண
வட்டமடித்த சூட்சம இடம்....
கோடி செலவுகள் செய்து தயாரித்த
உயிர்கொல்லி ஆயுதம் உதவுமாயென்று
வல்லரசு நாடுகள் அள்ளிக் கொடுக்க...
பதிலுக்கு கருகிய எம் மக்களை வாரி கொடுத்த
தமிழனுக்கு வேதனைக் கூடம்
சைனாவுக்கோ சோதனைக்கூடம்...
தடை செய்யப்பட்ட ஆயுததிற்கு
அங்கு தடைகள் இல்லை
தமிழனை அழிப்பதே அவர்களின்
தலையாய கொள்கை....
போர் மரபு கூறிய முதியோர், சிறியோர்?
போர் மரபு மீறிய குற்றுயிர் மரணம்
கண்டும் காணாத ஐநா சாசனம்
கட்டிக் காத்து
காட்டி கொடுத்தது இந்திய சீதனம்
ஆயிரக்கணக்கில்
மக்களைக் கொன்று
அழித்தொழித்த
முள்ளிவாய்க்காலில்
பெறுக்கெடுத்த மனிதரெத்தம்
உலகத் தமிழர் நெஞ்சில் பாய்ந்து
வளர்த்தெடுக்குது தமிழிழத்தை...
புதன், 30 ஜூன், 2010
என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்
என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்
என்றும் அழியாப் புகழுடைக் கவிஞன்
எங்கும் எதிலும் கவியாய் வாழும்
என் ஞானக்குருவே கண்ணதாசா !
தமிழென் உள்ளத்தைத் தாலாட்ட
தங்கப்பாடல்கள் தந்தவன் நீ
தமிழின் பெருமை ஓங்கி உயர
தமிழாய் சுவாசத்தில் நிறைந்தவன் நீ
ஓடி ஓடிக் களைத்து இன்றெனக்கு
ஓய்வு வேண்டும் என நெஞ்சு கேட்கையில்
இதமாய் வருடிக்கொடுத்து தாலாட்டுது உன்
இனிமையான பாடல்கள் என்னுள்ளத்தை
கற்றது கையளவு புவியில் நாம்
கல்லாதாது கடலளவு என்றாள் மூதாட்டி
கற்ற அனுபவங்கள் அனைத்தையும்
கக்கினாய் மற்றவர் வாழ்வை உணரவே !
நாட்டு எல்லைகள் கடந்ததைய்யா
நல்ல உன் கருத்தான பாடல்கள்
நானிலத்தில் தமிழால் அனைவரும்
நண்பராய் வாழ வேண்டுமய்யா
உள்ளத்தை உறவுகள் மாறி மாறி
உடைத்த வேளைகளில் எல்லாம்
உயிரை நண்பர்கள் துவைத்த வேளைகளில்
உரமாய் எனக்கு துணையானது உன் பாடல்களே
நீ வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் தான்
நீங்காத தடங்களாய் நீ விட்டுச் சென்ற
நினைவகலாப் பாடல்கள் கவிதைகள்
நித்திய ஞாபக ஆராதனை உனக்கு
ராமன், இயேசு, அல்லா என அனைவரும்
அகிலத்தில் சமனெனப் பாடி நீ
அடைந்தது தேசிய விருதே ! மறவோம்
அனைவரும் நீ சொன்ன உண்மையை
கவிதைகளின் தாசனே தமிழின் நேசனே
கண்டோம் அடுத்தொரு நினைவுநாள்
கணோம் உன்போல் கவி இனியொருநாள்
காத்திருப்போம் உன் நினைவுகளை எந்நாளும்
உனது ஆசி வேண்டி இங்கொரு தம்பி
உனது பாதங்களில் தலைவைத்து
உன்நினைவுநாளில் வணங்குகிறேன்
உன் ஆசியால் அன்புடன் தமிழ்பூத்து குலுங்கட்டும்
என்றும் அழியாப் புகழுடைக் கவிஞன்
எங்கும் எதிலும் கவியாய் வாழும்
என் ஞானக்குருவே கண்ணதாசா !
தமிழென் உள்ளத்தைத் தாலாட்ட
தங்கப்பாடல்கள் தந்தவன் நீ
தமிழின் பெருமை ஓங்கி உயர
தமிழாய் சுவாசத்தில் நிறைந்தவன் நீ
ஓடி ஓடிக் களைத்து இன்றெனக்கு
ஓய்வு வேண்டும் என நெஞ்சு கேட்கையில்
இதமாய் வருடிக்கொடுத்து தாலாட்டுது உன்
இனிமையான பாடல்கள் என்னுள்ளத்தை
கற்றது கையளவு புவியில் நாம்
கல்லாதாது கடலளவு என்றாள் மூதாட்டி
கற்ற அனுபவங்கள் அனைத்தையும்
கக்கினாய் மற்றவர் வாழ்வை உணரவே !
நாட்டு எல்லைகள் கடந்ததைய்யா
நல்ல உன் கருத்தான பாடல்கள்
நானிலத்தில் தமிழால் அனைவரும்
நண்பராய் வாழ வேண்டுமய்யா
உள்ளத்தை உறவுகள் மாறி மாறி
உடைத்த வேளைகளில் எல்லாம்
உயிரை நண்பர்கள் துவைத்த வேளைகளில்
உரமாய் எனக்கு துணையானது உன் பாடல்களே
நீ வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் தான்
நீங்காத தடங்களாய் நீ விட்டுச் சென்ற
நினைவகலாப் பாடல்கள் கவிதைகள்
நித்திய ஞாபக ஆராதனை உனக்கு
ராமன், இயேசு, அல்லா என அனைவரும்
அகிலத்தில் சமனெனப் பாடி நீ
அடைந்தது தேசிய விருதே ! மறவோம்
அனைவரும் நீ சொன்ன உண்மையை
கவிதைகளின் தாசனே தமிழின் நேசனே
கண்டோம் அடுத்தொரு நினைவுநாள்
கணோம் உன்போல் கவி இனியொருநாள்
காத்திருப்போம் உன் நினைவுகளை எந்நாளும்
உனது ஆசி வேண்டி இங்கொரு தம்பி
உனது பாதங்களில் தலைவைத்து
உன்நினைவுநாளில் வணங்குகிறேன்
உன் ஆசியால் அன்புடன் தமிழ்பூத்து குலுங்கட்டும்
திங்கள், 28 ஜூன், 2010
நான் பைத்தியம்தானடா..
என்னை காதலிகிறேன் என்று சொல்லி கரம் பிடித்தவனே
இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு
நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா
பதிலை சொல்லடா எனக்கு...?
நான் உன்னை காதலித்தது பாவாமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவாமா... ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா...?
எதடா நான் செய்த பாவம்...?
காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில்
போராடி கொண்டு இருக்கிறேன்
என் போராட்டத்துக்கு முடிவேயில்லையா
காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணிர்த் துளிகள் வடிகின்றது ..
என்னை பைத்தியக்காரி என்கிறாய்
நான் பைத்தியம் தானாடா என்னை தூக்கி எறியும்
உன்னை தேடித்தேடி அலைகிறேனே
நான் பைத்தியம்தானடா..
இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு
நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா
பதிலை சொல்லடா எனக்கு...?
நான் உன்னை காதலித்தது பாவாமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவாமா... ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா...?
எதடா நான் செய்த பாவம்...?
காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில்
போராடி கொண்டு இருக்கிறேன்
என் போராட்டத்துக்கு முடிவேயில்லையா
காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணிர்த் துளிகள் வடிகின்றது ..
என்னை பைத்தியக்காரி என்கிறாய்
நான் பைத்தியம் தானாடா என்னை தூக்கி எறியும்
உன்னை தேடித்தேடி அலைகிறேனே
நான் பைத்தியம்தானடா..
கண்ணகி மண்ணிலிருந்து
ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...
அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்.
-தாமரை-
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...
அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்.
-தாமரை-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)