புதன், 30 ஜூன், 2010

என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்

என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்
என்றும் அழியாப் புகழுடைக் கவிஞன்
எங்கும் எதிலும் கவியாய் வாழும்
என் ஞானக்குருவே கண்ணதாசா !
தமிழென் உள்ளத்தைத் தாலாட்ட
தங்கப்பாடல்கள் தந்தவன் நீ
தமிழின் பெருமை ஓங்கி உயர
தமிழாய் சுவாசத்தில் நிறைந்தவன் நீ
ஓடி ஓடிக் களைத்து இன்றெனக்கு
ஓய்வு வேண்டும் என நெஞ்சு கேட்கையில்
இதமாய் வருடிக்கொடுத்து தாலாட்டுது உன்
இனிமையான பாடல்கள் என்னுள்ளத்தை
கற்றது கையளவு புவியில் நாம்
கல்லாதாது கடலளவு என்றாள் மூதாட்டி
கற்ற அனுபவங்கள் அனைத்தையும்
கக்கினாய் மற்றவர் வாழ்வை உணரவே !
நாட்டு எல்லைகள் கடந்ததைய்யா
நல்ல உன் கருத்தான பாடல்கள்
நானிலத்தில் தமிழால் அனைவரும்
நண்பராய் வாழ வேண்டுமய்யா
உள்ளத்தை உறவுகள் மாறி மாறி
உடைத்த வேளைகளில் எல்லாம்
உயிரை நண்பர்கள் துவைத்த வேளைகளில்
உரமாய் எனக்கு துணையானது உன் பாடல்களே
நீ வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் தான்
நீங்காத தடங்களாய் நீ விட்டுச் சென்ற
நினைவகலாப் பாடல்கள் கவிதைகள்
நித்திய ஞாபக ஆராதனை உனக்கு
ராமன், இயேசு, அல்லா என அனைவரும்
அகிலத்தில் சமனெனப் பாடி நீ
அடைந்தது தேசிய விருதே ! மறவோம்
அனைவரும் நீ சொன்ன உண்மையை
கவிதைகளின் தாசனே தமிழின் நேசனே
கண்டோம் அடுத்தொரு நினைவுநாள்
கணோம் உன்போல் கவி இனியொருநாள்
காத்திருப்போம் உன் நினைவுகளை எந்நாளும்
உனது ஆசி வேண்டி இங்கொரு தம்பி
உனது பாதங்களில் தலைவைத்து
உன்நினைவுநாளில் வணங்குகிறேன்
உன் ஆசியால் அன்புடன் தமிழ்பூத்து குலுங்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக