திங்கள், 28 ஜூன், 2010

நான் பைத்தியம்தானடா..

என்னை காதலிகிறேன் என்று சொல்லி கரம் பிடித்தவனே
இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு
நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா
பதிலை சொல்லடா எனக்கு...?

நான் உன்னை காதலித்தது பாவாமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவாமா... ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா...?
எதடா நான் செய்த பாவம்...?

காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில்
போராடி கொண்டு இருக்கிறேன்
என் போராட்டத்துக்கு முடிவேயில்லையா

காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணிர்த் துளிகள் வடிகின்றது ..

என்னை பைத்தியக்காரி என்கிறாய்
நான் பைத்தியம் தானாடா என்னை தூக்கி எறியும்
உன்னை தேடித்தேடி அலைகிறேனே
நான் பைத்தியம்தானடா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக