அன்பான சடலங்களே!
நீங்கள்தான் ஒரு காலத்தில் எனது தாயகத்தின்
நம்பிக்கையாய் விளங்கினீர்கள்
சிதைவுறும் உங்கள் எலும்புகளின் துகள்களை
என் நெற்றியில் இடுங்கள்!
உங்கள் குளிர்ந்த கரங்களால்
எனது இதயத்தை தொடுங்கள்!
எனது காதுகளில் ஓங்கி அரற்றுக!
எனது முனகல்கள் ஒவ்வொன்றும்
இன்னுமொரு கொடுங்கோலனின்
கண்ணீராக மாறும்!
என்னை சூழ்ந்திடுங்கள்!
உங்கள் உணர்வுகளை
எனது ஆத்மா உள்வாங்கவும்
கல்லறையின் பயங்கரத்தை எனக்களிக்கவும்
என்னைச் சுற்றித் திரியுங்கள்!
இழிவான அடிமைத்தனத்தில்
ஒருவன் வாழும்போது
கண்ணீர் துளிகள் மட்டும் போதா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக